எனக்கும் இவளுக்கும் நெடுநாள் உறவு.
இவளைத் தரிசிக்காமல் என் நாட்கள் விடிவதில்லை.
நான் தவழும் காலத்திலேயே இத்திண்ணை என் சொந்தம்.
இவள் முன்றலில் நின்ற பெருவிருட்சம் குண்டு தைத்த காயங்களால் குடைசரிந்த கதை என் சின்ன இதயத்தைச் சில்வண்டாய் குடைவதுண்டு.
தாய் மண்ணின் சூடு தணியாத இதயத்தின் தேடல்கள்